பழநி அருகே வீரமாட்சியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா

பழநி, ஜூன் 26: பழநி அருகே அமரபூண்டி வீரமாட்சியம்மன் கோயிலில் நடந்த வருடாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பழநி அருகே அமரபூண்டியில் உள்ள வீரமாட்சியம்மன்-  வீரக்குமாரர் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசங்களை வைத்து சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து அனுக்கை, விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், கலசபூஜை, அக்கினிகார்யம், திரவியாஹுதி, பூர்ணாகுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் வீரமாட்சி- வீரக்குமாரர் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மகாதீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

Related Stories: