ஒட்டன்சத்திரத்தில் குற்றங்களை தடுக்க சிசிடிவி பொருத்தம்

ஒட்டன்சத்திரம், ஜூன் 26: ஒட்டன்சத்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கனி மார்க்கெட், தயிர் மார்க்கெட் உள்ளதால் உள்ளூர் விவசாயிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தவிர பஸ்நிலையம், காவல்நிலையம், நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம் தேவைக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் ஒட்டன்சத்திரம் நகர் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் நகர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ஒட்டன்சத்திரம் போலீசார் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த முடிவு செய்தனர். அதன்படி முதற்கட்டமாக காவல்நிலையம் எதிரே தனியார் நிறுவனத்தினர் பங்களிப்புடன் 2 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் என்றும், நகரின் முக்கிய பகுதிகளில் விரைவில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: