பலமுறை கூறியும் பயனில்லை: கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? சத்துணவு திட்ட புகாருக்கு புதிய இணையதளம்

திண்டுக்கல், ஜூன் 26:  திண்டுக்கல் மாவட்டத்தில் சத்துணவு திட்டம் தொடர்பான புகார்களை புதிய இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் வினய் கூறியிருப்பதாவது, ‘திண்டுக்கல் மாவட்டத்தில் சத்துணவு திட்டம் தொடர்பான புகார்களை அளித்திட ஏற்கனவே இலவச டெலிபோன் எண் 1800-4250382 கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த எண்ணில் பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வந்தனர். தற்போது சத்துணவு திட்டத்தினை பற்றி அறிந்து கொள்ளவும், சத்துணவு திட்டம் தொடர்பாக பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் புகார் அளிக்க விரும்பினால் www.middaymeal.tn.gov.in ஆகிய இணையதள முகவரி மூலமாக தங்களது புகார்களை தெரிவிக்கலாம். ஆன்லைனில் விபரங்களையும் அனுப்பி வைக்கலாம். இதற்கு அதிகாரிகள் மூலம் தீர்வு காணப்படும்’ என்றார்.

Related Stories: