வத்தலக்குண்டு, ஜூன் 25: வத்தலக்குண்டுவில் இருந்து உசிலம்பட்டி நோக்கி நேற்று மதியம் ஒரு தனியார் பால் வேன் சென்று கொண்டிருந்தது. அதன் பின்புறம் ஒரு லாரியும், ஒரு தனியார் பஸ்சும் அடுத்தடுத்து வந்தன. விருவீடு வந்த போது அங்குள்ள வேகத்தடையில் லாரி ஏறியது. அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் லாரி மீது மோத, லாரி முன்னால் சென்ற பால் வேன் மீது மோதியது. இதில் பால் வேன் சாலையின் இடது பறம் ஒதுங்கி நின்றது. மோதிய வேகத்தில் லாரி அங்கிருந்த ராஜேந்திரன் என்பவரின் டீக்கடைக்குள் புகுந்தது. அப்போது லாரி மோதியதில் கடையில் நின்ற விருவீடு காசம்மாள், செக்காபட்டி தங்கவேலு, சென்மார்பட்டி ராமராஜ் ஆகியோர் படுகாயமைடைந்தனர். கடை முன்பு நின்ற டூவீலர் ஒன்று நசுங்கி போனது. மேலும் வடை கடையில் இருந்த சிலிண்டர் லாரிக்கு அடியில் சிக்கி கொண்டது.