ஒட்டன்சத்திரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு

ஒட்டன்சத்திரம், ஜூன் 25: ஒட்டன்சத்திரம் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எஸ்ஐ இலங்கேஸ்வரன் தலைமையிலான போலீசார் ஒட்டன்சத்திரம் செக்போஸ்டில் டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை நிறுத்தி ஹெல்மெட் அணிந்து ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி, வாகனங்களை இயக்க முறையான ஓட்டுனர் உரிமம், காப்பீடு மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது என்றும் எடுத்துரைத்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட வாகனஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: