புதுக்கோட்டை, ஜூன்19: புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில் குறையும் வரை பள்ளிகளில் இறைவணக்க நேரத்தை வகுப்பறைகளிலேயே நடத்த வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வலியுறுத்தப்பட்டது.புதுக்கோட்டை நகர்நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜாவை நேற்று நேரில் சந்தித்தார். அப்போது, கோடைகாலத்தில் கடுமையான வெயில் அடித்து வரும் நிலையில் பள்ளிகளில் காலை நேரத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை இறைவணக்கம் நடைபெறும்.