மாவட்ட கல்வி அதிகாரியிடம் வலியுறுத்தல் ஆலங்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் தொழுகை

ஆலங்குடி, ஜூன் 19: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் கண்ணீர் மல்க தொழுகை நடத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம் வறட்சியான மாவட்டமாகும். இங்கு ஆறுகள், ஏரிகள் இல்லாததால் மழையை நம்பியே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் மழை பெய்த போதிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைப்பொழிவு இல்லை. இதனால் குளங்களும், ஆழ்குழாய் கிணறுகளும் நீரின்றி வறண்டு போனதால் பொதுமக்களும் கால்நடைகளும் குடிநீர் கூட கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மழை வேண்டி பல்வேறு சமூகத்தினரும் யாகங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இஸ்லாமியர்கள் தங்களது கடைகளை அடைத்துவிட்டு பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக சென்று அம்புலி ஆறு அருகே சிறப்பு தொழுகை நடத்தினர். அப்போது மழை வேண்டி இறைவனிடம் அவர்கள் தொழுகை நடத்தியது பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.தமிழகம் முழுவதும் பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக சுமார் 69ஆயிரம் பேர் உள்ளனர்.அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் தலைமையில் வாரிய கூட்டம் 18.02.2013 அன்று ஒரு முறை நடத்தியதோடு சரி, அதன்பிறகு வாரிய த்தின் பதவிகாலம் 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இந்த மூன்று ஆண்டுகளில் பூசாரிகளுக்கு பேரளவில் கூட நலத்திட்டங்கள் வழங்கப் பட வில்லை. கடந்த ஆண்டுகளில் நலத்திட்டத்திற்காக விண்ணப்பித்த பல பூசாரி களுக்கு நலத்திட்டம் ஏதும் கிடைக்காமல் மன மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.வாரிய கூட்டம் நடந்து ஐந்து ஆண்டுக்கு மேல் ஆகியும் கூட்டம் இதுவரை நடத் தப்பட வில்லை. தமிழக திருக்கோவில்களில் கோடிக்கணக்கான வருமானங்கள் இருந்தும் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள் வறுமை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.நல வாரியத்துக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை. பூசாரிகள் நலவாரியம் பூசாரிகளுக்கு வெறும் பெயரளவில் மட்டுமே உள்ளது. எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுப் பதோடு ஐந்து ஆண்டுகளாக வாரியத்திற்காக ஒதுக்கப்படாத நிதியை உடனே ஒதுக்க வேண்டும்.பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களை புதுப்பிக்கும் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. வாரிய அடையாள அட்டை புதுப்பிக்க மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை போதிய அக்கறை செலுத்தாத காரணத்தால் அடையாள அட்டை புதுப்பிக்க செல் லும் பூசாரிகள் மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகளால் விரட்டி அடிக்கப் படுகின்றனர்.

இது வரை தமிழகம் முழுவதும் வாரிய உறுப்பினர்கள் 69ஆயிரம் பேர் சேர்க்கப் பட்டு உள்ளனர். இதில் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர்கள் சுமார் 7000 பேர் மட்டுமே என தெரிய வருகிறது. மீதம் உள்ள பூசாரிகளை புதுப்பிக்க காலதாமதப் படுத்துவது ஏன் என தெரியவில்லை.எனவே அரசு பூசாரிகள் நல வாரியம் செயல்படுகிறதா? இல்லையா என்பது பூசாரி களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.எனவே தமிழக அரசு பூசாரி கள் நலவாரியத் செயல்பட கூடிய வாரியமாக செயல்படுத்திட வேண்டும். விரை ந்து வாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர்களை உடனே நியமிக்க வேண்டும். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் ஆண்டு வருமானம் 10ஆயிரத்திற்கு கீழ் வருவாய் உள்ள கோயில் சுமார் 24ஆயிரத்திற்கு கீழ் உள்ளன. இக்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளின் நிலமை, பணி பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தமிழக கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் வாசு கூறுகை யில், தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் பணியாற்றும் பூசாரிகள் எத்தனை பேர், அவர்களது முகவரி பட்டியல் தேவை என சென்னை ஆணையரிடமும், இந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்ட போது முகவரி பட்டியல் இவ்வலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை என ஆணையரும் தெரிவிக்கின்றார். மாவட்ட அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள் பணி பாது காப்பு இல்லாமல் மாத ஊதியம் இல்லாமல் அனாதைகள் போல இருக்கும் அவல நிலையத்தான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பதில் தெரிவிக்கின்றது.

எனவே தமிழக அரசு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூசாரிகளை பாதுகாத் திட வேண்டுமென இது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக் கில் 12வாரத்தில் அரசானை பிரப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், அதிகாரி களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தால் உத்திரவிடப்பட்டது.இதனை அதிகாரிகள் செயல்படுத்தியதாக தெரியவில்லை எனவே இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தர விட வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு பதிவு தபால் மூலமாக மனு அனுப் பப்பட்டுள்ளன என்றார்.தமிழகம் முழுவதும்இது வரை தமிழகம் முழுவதும் வாரிய உறுப்பினர்கள் 69 ஆயிரம் பேர் சேர்க்கப் பட்டு உள்ளனர். இதில் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர்கள் சுமார் 7000 பேர் மட்டுமே என தெரிய வருகிறது. மீதம் உள்ள பூசாரிகளை புதுப்பிக்க காலதாமதப் படுத்துவது ஏன் என தெரியவில்லை.பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்கள் புதுப்பிக்கும் பணியில் தொய்வுஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூசாரிகளை பாதுகாத்திட வேண்டு மென சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 12வாரத்தில் அரசானை பிரப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தால் உத்திரவிடப்பட்டது.

Related Stories: