21ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூன்19: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 21ம்தேதி நடக்கிறது.புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனடையலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: