மனைவி மாயம் கணவர் புகார்

விருத்தாசலம், ஜூன் 18: விருத்தாசலம்  அருகே உள்ள கார்மாங்குடி கிராமத்தைச்  சேர்ந்தவர் மருதமுத்து (40). இவரது மனைவி சுதா (34). இவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு  முன்பு திருமணம் நடைபெற்று 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும்  உள்ளனர். இந்நிலையில் சுதா கடந்த மாதம் 26ஆம் தேதி விருத்தாசலம்  மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றவர்  வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் பல  இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மருதமுத்து கொடுத்த  புகாரின்பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: