பண்ருட்டி, ஜூன் 18: பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி(19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும், மணப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வெங்கடேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.இதன் காரணமாக இருவரும் அவ்வப்போது நேரில் சந்தித்து பேசிகொள்வது வழக்கமாம். இதனை பயன்படுத்தி ஆட்டோ டிரைவர் லட்சுமியை திருமணம் செய்வதாக கூறி ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து பெண்ணின் தாய் புதுப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி திருச்சியில் இருந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசனை கைது செய்து இளம்பெண்ணை மீட்டனர்.