மனைவியை முகநூலில் தவறாக சித்தரித்து போட்டோ வெளியீடு

நெய்வேலி, ஜூன் 18: நெய்வேலியில் குடும்பம் நடத்த வராத மனைவியை தவறாக சித்தரித்து முகநூலில் போட்டோ வெளியிட்ட கணவனை போலீசார் தேடி வருகின்றனர். நெய்வேலி வட்டம் 5ல் வசித்து வருபவர் மரியதாஸ் மகள் ஜெபமேரி (25), பட்டதாரி. இவர்க்கும் இந்திரா நகர் அடுத்த மாற்றுக்குடியிருப்பை சேர்ந்த மணி (30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. மணி அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். இதனால் ஜெபமேரி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவாராம். கடந்த 6 மாதமாக அவர் தாய் வீட்டிலேயே இருந்து வருகிறார். விவாகரத்து கேட்டு கடலூர் குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நடந்து வருகிறது.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மணி அங்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணி, மனைவி ஜெபமேரி, அவரது தங்கை ஆகியோரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ெஜபமேரி நெய்வேலி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான மணியை தேடி வருகின்றனர்.

Related Stories: