விருத்தாசலம், ஜூன் 18: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். வட்ட குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், சிவஞானம், குமரகுரு, இளங்கோவன், அன்புச்செல்வி, சாமிதுரை, கலைச்செல்வன், அன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அசோக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அசோக்குமார் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அசோக்குமாரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஏற்கனவே அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் காவல்துறையில் புகார் அளித்ததன்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அப்பகுதி காவல்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.