₹10 ஆயிரம் மதிப்புள்ள மின்கம்பி திருட்டு

புவனகிரி, ஜூன் 18: புவனகிரி அருகே உள்ள பூதவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள வயல் பகுதி வழியாக மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாழ்வாக சென்ற இந்த மின்சார கம்பிகளை காணவில்லை. மர்ம நபர்கள் அலுமினிய மின் கம்பிகளை திருடி எடுத்துச் சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மின்சார வாரியத்தின் புவனகிரி உதவி மின் பொறியாளர் திருநாவுக்கரசு (36) புவனகிரி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரத்து 110 மீட்டர் நீளம் கொண்ட அலுமினிய கம்பிகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: