விஷால் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்

புதுக்கோட்டை, ஜூன் 18: விஷால் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்று சுவாமி சங்கரதாஸ் அணி குற்றம் சாட்டியுள்ளது.தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர்கள் உதயா, கணேஷ், ஆர்த்தி ஆகியோர் புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்திற்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள் நாடக கலைஞர்களிடம் தங்களுக்கு ஆதரவு கேட்டு பேசினார். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், விஷால் தன்னை முன்னிலை படுத்தி கொள்வதற்காக எதிர் அணியினர் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். விஷால் என்ற தனிப்பட்ட நபர் தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக ஏதோ பொய்யான குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைக்கிறார். கடந்த காலங்களில் அவருடன் நாங்கள் இருந்தோம். அவர் எப்படியெல்லாம் நடந்து கொள்வார் என்பது எங்களுக்கு தெரியும். அந்த அணியில் இருந்த நாங்கள் ஏன் வெளியே வந்தோம் என்பது அவர்களுக்கு தெரியும். விஷாலின் தன்னிச்சையான செயல்பாடு பல உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை. பாண்டவர் அணியில் எங்களுக்கு ஸ்லீப்பர் செல்கள் உள்ளன. அவர்கள் எங்கள் அணிக்கு தான் வாக்களிப்போம் என தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்து விட்டனர். நடிகர் ராதாரவி மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகமே, குறிப்பாக தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரையுலக சங்கங்கள் எங்கள் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories: