அறந்தாங்கியில் பெட்ரோல் நிரப்பிய டூவீலர் திடீரென தீப்பற்றி எரிந்தது

புதுக்கோட்டை, ஜூன் 18: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினகோட்டை கோட்டையை சேர்ந்த முகமது மன்சூர் என்பவரும், அவரது தாயாரும் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு திரும்பி வீட்டுக்கு செல்லும்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் தீ பற்றியது. அக்கம் பக்கத்தினர் பார்த்து சத்தம் போட்டதால் உடனே வண்டியை நிறுத்திவிட்டு உடனே கீழே இறங்கினர். அக்கம்பக்கத்தினர் மணல் மற்றும் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். தீ அணையாததால் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீமேலும் பரவாமல் அணைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: