கலெக்டரிடம் பொதுமக்கள் மனு மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு ஆயுதங்களுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கைது

புதுக்கோட்டை, ஜூன் 18: புதுக்கோட்டையில் ஆயுதங்களுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் நேற்று முன்தினம் இரவு திருக்கோகர்ணம், திருவப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திருவப்பூர் ரயில்வே கேட் பகுதிகளில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (20), உதயநிதி(21), பீர்முகமது(21), சந்தோஷ்குமார்(25) ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கத்தி, கயிறு, மிளகாய்பொடி போன்றவற்றை வைத்து கொண்டு கூட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபடிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: