மது விற்ற 12 பேர் கைது

திருப்பூர்,மே 25:மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி நேற்று முன் தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மணியகாரன்பாளையம் ரோடு பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட ஆனந்த் (25),நவீன் (21), புஷ்பா தியேட்டர், காந்திநகரில் மது விற்ற குமார் (42), ராஜேஷ்குமார் (34), அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திநகர், டீச்சர்ஸ் காலனியில் மது விற்ற மணி (32), கணேஷ் (36),பாண்டியன்நகர், திருமுருகன் பூண்டியில் மது விற்ற சண்முகசுந்தரம் (30), ஈஸ்வரன் (35), அமர்ஜோதிகார்டன், வஞ்சிபாளையம் போன்ற பகுதிகளில் மது விற்ற பத்மநாபன் (27), ரகுநாத் (25) கல்லாங்காடு, தாராபுரம் ரோடு பகுதிகளில் மது விற்றபழனிகுமார் (31), லட்சுமணன் (42) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

Related Stories: