திருப்பூர், மே 25: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாபெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதன் மூலமாக நாடு மேலும் வளர்ச்சி ெபறும். அமைதியான சூழலும் நாட்டில் நிலவும்.