கடனை செலுத்த முடியாததால் விரக்தி தொழிலாளி தற்கொலை

கோவை, மே 25:கோவை கணபதி கே.ஆர்.ஜி. நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(54). ஒர்க்ஷாப் தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் வடவள்ளி ரோட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில், கடன் சுமையால் அவதிப்பட்டு வந்த ஜெயபிரகாஷ், அதனை செலுத்த முடியாத விரக்தியில் தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான பணி தீவிரம் கோவை சாயிபாபா காலனியில் உள்ள எம்ஜிஆர்., மார்க்கெட்டில் காய்கறி கழிவில் இருந்து உரம் தயாரிப்பதற்காக திடக்கழிவு மேலாண்மை கட்டிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Related Stories: