மஞ்சூர், மே 24: மஞ்சூர் அருகே மலை பாதையில் காஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் தனியார் காஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு கோவையில் இருந்து காஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி ஓணிகண்டியில் உள்ள காஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் சிலிண்டர்கள் இறக்கிய பின் கிடங்கில் இருந்து நேற்று காலி சிலிண்டர்களை ஏற்றி கொண்டு மீண்டும் கோவைக்கு சென்றது.