நீலகிரியில் ஆ.ராசா வெற்றி சத்தியில் திமுகவினர் கொண்டாட்டம்

சத்தியமங்கலம், மே 24:நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றதை தொடர்ந்து பவானிசாகர் தொகுதியில் திமுகவினர் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஆ.ராசா போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் தியாகராஜன் போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.

இதில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னதாக நேற்று காலை முதலே ஆ.ராசா வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றதை தொடர்ந்து சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் பஸ் நிலையம் அருகே எஸ்பிஎஸ் கார்னரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதேபோல் புஞ்சை புளியம்பட்டி, தாளவாடி பவானிசாகர் உள்ளிட்ட இடங்களில் திமுக சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Related Stories: