கோவை, மே 24:கோவை சேதுவாய்க்கால் செக்போஸ்ட் யை சேர்ந்தவர் பிரதீப்பின் மனைவி கவிதா(27). இவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் எங்கள் பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது ஒரு சிலர் தகராறில் ஈடுபட்டனர். அதனை தட்டி கேட்ட என்னை தகாத வார்த்தையால் பேசி தாக்கினர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன் பேரில், போலீசார் செல்வபுரம் பகுதியை சேர்ந்த மதிவாணன், குணவதி, முருகன், சந்தியா, தக்கர், சந்தான லட்சுமி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.