ஈரோடு, மே 24: ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம்காலனி தேவா வீதியை சேர்ந்தவர் முருகானந்தம்(45). இவர் சொந்தமாக மினி டோர் ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு வாடகை முடிந்து அவரது மினி டோரை வீட்டிற்கு அருகில் நிறுத்தி சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதேபோல் ஈரோடு கொல்லம்பாளையம் ஜீவானந்தம் வீதியை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவர் அவருக்கு சொந்தமான மினிடோர் ஆட்டோவை நேற்று முன்தினம் வீட்டிற்கு அருகில் நிறுத்தி விட்டு சென்றபோது, மர்மநபர்கள் திருடி சென்றனர்.