திருமலைக்கேணியில் சங்கடஹர சதுர்த்தி

நத்தம், மே 23: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது.

இதையொட்டி அங்குள்ள விநாயக பெருமானுக்கு அருகம்புல், மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்தனர். முன்னதாக விசேஷ பூஜைகளும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர். அருகிலுள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியிலும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

Related Stories: