துவங்கியது சீசன் பழநிக்கு பலா வரத்து அதிகரிப்பு

பழநி, மே 23: சீசன் துவங்கி உள்ளதால் பழநிக்கு பலா பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் சீசன் தற்போது துவங்கி உள்ளது. இதனால் பழநி நகருக்கு பலாப்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கடலூர், பண்ருட்டி பகுதிகளில் இருந்து அதிகளவு பலாப்பழங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கிலோ பலாப்பழம் ரூபாய் 30க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 பலாப்பழம் 5ல் இருந்து 7 கிலோ வரை எடை கொண்டதாக உள்ளது. சீசன் துவங்கும் போது வரத்து அதிகரித்து விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், இம்முறை போதிய மழையின்னையால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதால் பலாப்பழ வரத்து சீசனுக்கேற்ப இல்லை. இதனால் பெரிய அளவில் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: