பாழடைந்து காணப்படும் அரசு குடியிருப்புகள்

சங்கராபுரம், மே 24: சங்கராபுரத்தில் வேளாண்மை துறை அலுவலகம் இயங்கி வருகிறது. வேளாண்மைத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு குடியிருப்பு சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் மத்திய கூட்டுறவு வங்கிக்கு அருகில் கட்டப்பட்டது. இந்த நிலையில், வேளாண்மை குடியிருப்பு தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளதால் அந்த குடியிருப்பில் சில வருடங்களாக யாரும் குடியிருக்கவில்லை. இதனால் இக்கட்டிடம்  சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

இக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தை கட்ட வேண்டும். இல்லையென்றால் இந்த இடம் சங்கராபுரம் மைய பகுதியாக உள்ளதால் புதிய நியாய விலை கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: