ஓசூர் தொகுதியில் பெட்டிகள் மாறியதால் குளறுபடி

ஓசூர், மே 24: ஓசூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது, 4வது சுற்றில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்தலின்போது மக்களவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஓசூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஓசூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம், மக்களவைத் தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வைக்கப்பட்டது. இதனை வாக்கு எண்ணிக்கையின்போது ஓசூர் துணை ஆட்சியர் விமல்ராஜ் கண்டறிந்தார். இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றி வைக்கப்பட்டு, எண்ணப்பட்டது. இதனால், சிறிது நேரம் காலதாமதம் ஏற்பட்டது.

Related Stories: