இளம் பெண் தீக்குளித்து சாவு

தூத்துக்குடி, மே 24: தூத்துக்குடியில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தூத்துக்குடி துரைசிங் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வசந்தா (32). கூலி தொழிலாளி. இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அடிக்கடி அவர் மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி காலை வீட்டில் வசந்தா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாராம். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை  உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: