மஞ்சூர், மே 23: மஞ்சூர் அருகே ஏற்பட்ட காட்டு தீயில் சுமார் 20 ஏக்கர் புல்வெளிகள் தீயில் எரிந்து சாம்பலானது. மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. காடுகளில் மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து சருகாக காட்சியளிக்கிறது. குடிநீர் குட்டைகளும் வறண்டு போயுள்ளது. இதனால் மஞ்சூர் சுற்றுபுறங்களில் உள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டு தீ ஏற்பட்டு வனப்பகுதிகள் தீக்கிரையாகி வருவது வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மஞ்சூர் அருகே உள்ள குந்தாபாலம் வனப்பகுதியில் திடிர் காட்டு தீ ஏற்பட்டது. ஏற்கனவே செடி, கொடிகள் காய்ந்து கிடந்ததால் மள,மளவென தீ பரவியது.