மதுரை, மே 23: என்ஆர்ஐ காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முன்னாள் முதல்வருமான ரங்கசாமி நேற்று மதுரை வந்தார். முன்னதாக மீனாட்சி அம்மன் கோயிலிலும், பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் புதுச்சேரி எம்பி தொகுதி வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி, என்ஆர்ஐ காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள் புவனேஸ்வரன், முத்து உள்ளிட்ேடார் சென்றனர்.