மாவட்டம் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருமங்கலம், மே 23: தினகரன் செய்தி எதிரொலியாக, திருமங்கலத்தில் சேதமடைந்த காவிரி கூட்டுக்குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

திருமங்கலத்தில் நகராட்சி அலுவலகம் அருகே, முன்சீப் கோர்ட் ரோட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வந்தது. இது குறித்து கடந்த 20ம் தேதி நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா உத்தரவின்பேரில், முன்சீப் கோர்ட் ரோட்டில் குழாய் உடைந்த இடத்தில் பெரிய பள்ளத்தை தோண்டி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியை நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: