கஞ்சா விற்ற 4 பேர் கைது

திருச்சி, மே 23:  திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லாங்குளம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எ.புதூர் போலீஸ் எஸ்ஐ வேலுசாமிக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று எஸ்ஐ வேலுசாமி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த செய்யது(47), இவரது மனைவி ஜெரினா பேகம்(40), மகன் மாணிக்பாட்சா(21), அணிஸ்பாத்திமா(23) ஆகிய 4 பேரை கைது செய்தார். அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: