வாக்கு எண்ணிக்கையையொட்டி 5,100 போலீசார் பாதுகாப்பு

மதுரை, மே 23: இன்று வாக்கு எண்ணிக்கயையொட்டி, மதுரை மருத்துவக்கல்லூரி, நகர்ப்பகுதிகளில் 5 ஆயிரத்து 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 மதுரை மக்களவை தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக்கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீஸ் கமிஷனர் தலைமையில் மேற்கொண்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையப்பகுதியில், முன் எச்சரிக்கையாக தடுப்பு வேலிகள் அமைப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 4 துணை கமிஷனர்கள் 20க்கும் மேற்பட்ட உதவி கமிஷனர்கள் மற்றும் 5 ஆயிரத்து 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையமான மருத்துவக்கல்லூரி பகுதியிலும், நகர்ப்பகுதிகளிலும் பாதுகாப்பு

பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: