ராசிபுரம்,மே 23: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் ஹெச்.சி.எல் மென்பொருள் நிறுவனத்தின் சார்பில், 2017 -2018 மற்றும் 2018 -2019-ம் கல்வியாண்டில் பிளஸ்2 முடித்த மாணவ, மாணவிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்2 பொதுத்தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள், இந்த வேலை வாயப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு, 12 மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக ₹10 ஆயிரம் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் ஆரம்ப ஊதியமாக ஆண்டுக்கு ₹2.25 லட்சம் வரை ஹெச்.சி.எல் நிறுவனம் வழங்கும்.