காதல் தகராறில் வாலிபரை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு

சேதுபாவாசத்திரம், மே 23: சேதுபாவாசத்திரம் அருகே காதல் தகராறில் வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகி-்ன்றனர். சேதுபாவாசத்திரம் ராஜமடம் அருகில் உள்ள கீழத்தோட்டம் நடுத்தெருவை சேர்ந்தவர் குப்பைமுத்து மகன் காந்தி (27). மீனவரான இவர் சேதுபாவாசத்திரம் மருதங்காவயலில் உள்ள தனது உறவினர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகள் கலைவாணிக்கும் காந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது. கலைவாணியை காந்தி விரும்பினார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கலைவாணியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் காந்தி, கலைவாணியை சந்திக்க மருதங்காவயல் வந்தார். அப்போது அங்கிருந்த கலைவாணியின் உறவினர்கள் திலீப்குமார், கண்ணா, கலைவாணன் ஆகியோர் காந்தியை இங்கு எதற்கு வந்தாய் என கூறி கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த காந்தி, திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசில் காந்தி அண்ணன் நாகூர்பிச்சை (48) புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து திலீப்குமார், கண்ணா, கலைவாணன் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: