பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் அதிகாாி ஆய்வு

பாபநாசம், மே 23: பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் உள்ள பதிவேடுகளை மாவட்ட தீயணைப்பு நிலைய அலவலர் இளஞ்செழியன் ஆய்வு செய்தார்.பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் இளஞ்செழியன் ஆய்வு செய்தார். அப்போது தீயணைப்பு நிலையத்தில் இருந்து பதிவேடுகள், வீரர்களின் சீருடைகளை ஆய்வு செய்தார். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலகத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது நிலைய அலுவலர் கலைவாணன் உடனிருந்தார்.

Related Stories: