நாமக்கல், மே 23: வியாழன், வெள்ளிக்கிழமை நாடாளுன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணியும், தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதால், இ-சேவை மையங்களில் விண்ணப்பத்தவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பெற, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வழியாக அரசு இசேவை மையத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த சேவை மையத்தில் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், வண்ண வாக்காளர் அட்டை அச்சிடுதல் உட்பட80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. தற்போது பத்து மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்கல்வியில் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதாக மாணவ, மாணவிகள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். தேர்தல் அறிவித்தது முதலே இ-சேவை மையங்களி–்ல சான்றிழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.