ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம்

நாமக்கல், மே 23: நாமக்கல்லில் ஆதிதமிழர் பேரவை, மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சுமன் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் தமிழரசு, மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் பிரபாகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். செப்டம்பர் 15ம் தேதி ராசிபுரத்தில் ஆதி தமிழர் பேரவையின் மாவட்ட மகளிரணி மாநாடு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: