உச்சத்தை தொட்ட இளநீர் விலை

பரமக்குடி, மே 23: தமிழகம் முழுவதும் வெயில் கடுமையாக உள்ளது. இதனால் பரமக்குடி நகர் பகுதியில் பல இடங்களில், தற்காலிகமாக இளநீர் கடை, தர்பூசணி, பழ ஜூஸ் கடைகள், கூழ் கடைகளின் விற்பனை களை கட்டியுள்ளது. பகல் வேளையில் வெளியிடங்களுக்கு வாகனங்களில் செல்லும் மக்கள் அங்காங்கே நின்று குளிர்ச்சியான உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்த வகையில் பெள்ளாச்சி பகுதியில் இருந்து வரும் இளநீர் அதிகமாக பொதுமக்கள் விரும்புவதால், இதன் விலை தற்போது உயர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் ரூ.30 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர், தற்போது ரூ.50 முதல் 70 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிகளவு தண்ணீர் மற்றும் பதமாக இருப்பதாக சொல்லி விற்பனை செய்கின்றனர். இதுபோல், உள்ளூரில் இளநீர் ஒன்று ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரி கூறுகையில், கோடைகாலங்களில் இளநீர் விலை எப்போதும் அதிகமாகதான் இருக்கும். இந்த முறை இளநீர் காய் வரத்து குறைந்துள்ளதால், விற்பனைக்கு இளநீர் கிடைக்கவில்லை. இதனால் பெள்ளாச்சி இளநீரை ரூ.40 முதல் 50 வரை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இந்த மாதம் முழுவதும் விலை கூடுதலாகவே இருக்கும் என்றார்.

Related Stories: