சிவகாசி, மே 23: சிவகாசி அருகே சத்யா நகரைச் சேர்ந்தவர் பொட்டுக்கடலை (எ) ராஜ்குமார் மகன் செல்வகணேஷ் (23). இவர் மீது திருத்தங்கல் உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் 17 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் திருத்தங்கல் எஸ்.ஆர்.என்.எம். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செப்டிக் டேங்கில் வெட்டுக் காயங்களுடன் செல்வகணேஷ் பிணமாக கிடந்தது நேற்று தெரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.