பர்கூர் அருகே தொழிலாளியிடம் செல்போன்

பறித்த வாலிபர்கள் கைதுகிருஷ்ணகிரி, மே 23:  பர்கூர் அடுத்த என்டுசெட்டி தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திகேயன்(35). இவர் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில், மாதேப்பள்ளி அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக மற்றொரு டூவீலரில் வந்த 2 வாலிபர்கள், கார்த்திகேயனின் டூவீலரை ஒட்டியவாறு சென்றனர். அப்போது டூவீலரில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், திடீரென கார்த்திகேயனின் சட்டைப்பையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த கந்திக்குப்பம் போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கிருஷ்ணகிரியை சேர்ந்த இம்ரான்(21) மற்றும் செந்தில்நகரை சேர்ந்த தவ்லத் ஆகியோர் கார்த்திகேயனிடம் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.  இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: