குழந்தை மையம் திறப்புதர்மபுரி, மே 23: தமிழகத்திலேயே தர்மபுரி மாவட்டத்தில் தான், பெண் சிசுக்கொலை அதிகமாக நடந்தது. பெண் குழந்தைகளின் பிறப்பு சராசரி விகிதம் சரிந்ததையடுத்து, கடந்த 2002ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தொட்டில் குழந்தை திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்திலேயே முதலாவதாக, தர்மபுரி அரசு தலைமை மருத்துவமனையில் தொட்டில் குழந்தை மையம் திறந்து வைக்கப்பட்டது. கடந்த 16 வருடங்களில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், இந்த மையத்தில் சேர்க்கப்பட்டன. மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வந்த தொட்டில் குழந்தை மையத்தில், செவிலியர் இல்லாத காரணத்தால் கடந்த ஓராண்டாக மூடியே கிடந்தது. இதனால், இங்கு குழந்தைகளை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது.