தர்மபுரி, மே 23: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தர்மபுரி ஒன்றிய பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் ஸ்ரீதேவி அறிக்கை தாக்கல் செய்தார். பொருளாளர் ரீனா அறிக்கை வாசித்தார். பட்டுவளர்ச்சி துறை மாநில தலைவர் சிவபிரகாசம் பேரவையை துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுருளிநாதன் வாழ்த்தி பேசினார். கூட்டத்தில் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். உணவூட்டு ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய பேரவை நெடுஞ்செழியன், ஒன்றிய துணை தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் காவேரி மற்றும் வளர்மதி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.