தோகைமலை, மே 23: தினகரன் செய்தி எதிரொலியால் டி.இடையப்பட்டி புதிய பாலம் சாலை சீரமைக்கப்பட்டது.கரூர் மாவட்டம் தோகைமலை வழியாக பாளையத்தில் இருந்து திருச்சி பகுதிக்கு மெயின் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதனை நெடுஞ்சாலைதுறையினர் பராமரித்து வருகின்றனர். இதேபோல் தோகைமலை திருச்சி மெயின் ரோட்டில் உள்ள டி.இடையபட்டி அருகே புதிய பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது மெயின் ரோட்டை சேதப்படுத்தி புதிய பாலத்திற்கான பணிகள் செய்யப்பட்டது.பின்னர் இந்த பணிகள் முடிவடைந்து 2 மாதங்கள் கடந்தும் மெயின் ரோட்டில் அமைத்த பாலத்தை சரி செய்யாமல் அப்படியே விட்டு சென்றனர். மெயின் ரோட்டைவிட புதிய பாலத்தின் மட்டம் சுமார் 1 அடிக்கு மேல் உயரமாக இருந்ததால் தற்காலிகமாக மண்ணை கொண்டு சமம் செய்து வைத்திருந்தனர். ஆனால் தற்காலிகமாக பாலத்தில் அமைக்கப்பட்ட மண் சரிந்து குண்டும் குழியுமாக இருந்ததால் தினந்தோறும் வாகன விபத்துகள் நடந்து வந்ததாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். திருச்சி பகுதிக்கு செல்லும் ஆம்புலன்ஸ்சும் சிரமத்திற்குள்ளானது