கரூர், மே23: கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்து வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இரண்டாம் நாளான நேற்று மாலை நடந்த முதல் போட்டியில் சென்ட்ரல் ரயில்வே மும்பை அணி வெற்றி பெற்றது.கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்றுமுன்தினம் முதல் எல்ஆர்ஜி நாயுடு நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.இரண்டாம் நாளான நேற்று மாலை சென்ட்ரல் ரயில்வே மும்பை அணியும், ஏர்போர்ஸ் டெல்லி அணியும் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், 61 புள்ளிகள் பெற்ற சென்ட்ரல் ரயில்வே அணி வெற்றி பெற்றது. 56 புள்ளிகள் பெற்ற ஏர்போர்ஸ் டெல்லி அணி இரண்டாமிடம் பெற்றன.