கரூர், மே 23: அமராவதி நதி தூய்மைப்படுத்தும்பணியை மேற்கொள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்எதிர்பார்க்கின்றனர்.உடுமலையில்உள்ள அமராவதி அணையில் இருந்து கரூர் அமராவதி ஆற்றிற்குதண்ணீர் வருகிறது. நீர்திறப்பில்லாத காலங்களில் சீத்தை முட்கள் காடுபோல வளர்ந்துவிடுகிறது. அவற்றை அப்புறப்படுத்தாததால் ஆற்றில் அவ்வப்போது வரும் நீரையும் சீத்தை முட்கள் உறிஞ்சிவிடுகின்றன. இதுதவிர கரூர்நகரில் உள்ள கழிவுநீர் ஆங்காங்கே அமராவதி ஆற்றில் கலக்கிறது. கடந்த 20ஆண்டுகளுக்கு முன்னர் கரூர் மற்றும்இனாம் கரூருக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் இந்த திட்டத்தை உள்ளாட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை. கரூர் நகராட்சியில் இடம்பெற்றுள்ள தாந்தேணி நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் கொணடுவரப்படவில்லை. பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருக்கும் கரூர் நகராட்சியிலோ திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாத நிலை காணப்படுகிறது. இதனால் பல தெருக்களில் உள்ள வீட்டுக்கழிவுகள் அமராவதி ஆற்றில் விடப்படுகிறது. இதனால் அமராவதிஆற்றில் செடிகள் முளைத்துக் காணப்படுகிறது. பசுபதிபாளையம் பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,