குண்டும், குழியுமான காமதேனு நகர் சாலை சீரமைக்கப்படுமா?

கரூர், மே23: கரூர் அரசு காலனி பகுதியில் இருந்து வெங்கமேடு வரை செல்லும் காமதேனு நகர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் அரசு காலனி பகுதியில் இருந்து வெங்கமேட்டுக்கு விவசாய காட்டுப்பகுதியின் வழியாக மண்சாலை செல்கிறது. காமதேனு நகர்ச்சாலையாக கூறப்பட்டு வரும் இந்த சாலையில், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் நடந்து செல்லக் கூட முடியாத அளவுக்கு மோசமான நிலைக்கு மாறி விடும் எனவும் கூறப்படுகிறது. இந்த சாலையை தரம் உயர்த்தி,  அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே, அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, தேவைப்படும் பட்சத்தில் தரம் உயர்த்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: