கரூர் காமராஜர் சாலையில் பேட்ஜ் ஒர்க் செய்யாததால் பாதசாரிகள் கடும் அவதி

கரூர், மே 23: கரூர் நகராட்சி பகுதியில் சாலைபோடுவதும்அதில் குழிபறித்து சேதமாக்குவதும்தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.கரூர் நகராட்சிபகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு,குடிநீர்இணைப்பு போன்றவற்றில் பழுது ஏற்படுவதும், புதிய இணைப்பு கொடுப்பதும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முடித்ததும் சாலைகளை அமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் பலஇடங்களில் போடப்பட்ட சாலையை குழிபறித்து நகராட்சியே சேதமாக்கி வருகிறது. கரூர் காமராஜர் சாலையில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டிருந்தது.எனினும் பணி செய்வதற்காக குழிபறிக்கப்பட்டது.பின்னர் அந்த இடத்தில் மட்டும் தார்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இதன்மீது தார்பூச்சு பேட்ஜ்ஒர்க் செய்யப்படாததால் பாதசாரிகளும். இருசக்கர வாகனஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். பேட்ஜ் ஒர்க் செய்து தார்சாலையை விரைவில் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: