தனியாக இருந்த மாணவியிடம் சில்மிஷம்

தர்மபுரி, மே 23: வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தர்மபுரி அடுத்த பெரியாம்பட்டியை சேர்ந்த 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக, அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் மாணவி பள்ளிக்கு செல்லும்போது அவரை கேலி செய்வதோடு ஆபாச வார்த்தைகளை பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த சாந்தகுமார், மாணவியின் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதையடுத்து அங்கிருந்து சாந்தகுமார் தப்பியோடி விட்டார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், சாந்தகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories: