பாப்பிரெட்டிப்பட்டி, மே 23: பாப்பிரெட்டிப்பட்டி வட்டார சிறு,குறு விவசாயிகள் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ், 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம் என்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ், சொட்டுநீர் பாசனம், மழைத்தூவான் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள பெருவிவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படும். மேலும் 7 ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசு மானியம் பெற்று, சொட்டுநீர் பாசனம் அமைத்திருந்தாலும், தற்போதும் புதியதாக 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்துக்கொள்லாம். அரசு அங்கீகரித்துள்ள 25க்கும் மேற்பட்ட நிறுவனங்களில், விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.